Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

ஊரடங்கு தளர்வு தொடங்கியதால் பொருட்கள் வாங்க - மதுரை மாசி வீதிகளில் குவிந்த மக்கள் :

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பால் மதுரையில் மாசி வீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்க சமூக விலகல் இன்றி மக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் தொற்று குறைந்ததால் ஜூன் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரட ங்கை அரசு நீட்டித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மதுரையில் அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மீன், இறைச்சி மொத்த சந்தைகள் அதிகாலை 12 முதல் 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று மீன், இறைச்சிக் கடைகள் செயல்பட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கீழமாசி வீதியில் பலசரக்கு மொத்த விற்பனைக் கடை களும் திறக்கப்பட்டன. சில் லரை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பொருட்கள் வாங்க குவிந்தனர்.

மக்கள் சமூக விலகல் போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக இருந் தனர்.

மற்ற வீதிகளிலும் தளர்வுகளுக்கு உட்பட்டு சில கடைகள் திறந்து இருந்ததால் மக்கள் வாகனங்களுடன் திரண் டனர். இப்பகுதியில் பணியில் இருந்த காவல்துறையினரும் மைக் மூலம் அவர்களை எச்சரித்தபடியே இருந்தனர்.

முகக் கவசம் அணியாத, சமூக இடை வெளியை கடைபிடிக்காத வியாபாரிகள், பொதுமக்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய பஜார்களிலும், தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. வாகனப் போக்குவரத்தும் அதிகரித்தது.

கோரிப்பாளையம், காள வாசல், சிம்மக்கல், தெப்பக்குளம், பாண்டிகோயில் சந்திப் புகளில் போலீஸார் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

தேவையின்றி வெளியில் வந்தவர்களை எச்சரித்து அப ராதம் வசூலித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x