Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

காலை, மாலை ரேஷன் கடை செயல்படும் : தமிழக உணவுத்துறை உத்தரவு :

சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் காலை 9 முதல் 12.30 வரையும் பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் செயல்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ரேஷன் கடைகள், அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.

மேலும், கரோனா நிவாரணம் 2-ம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள் தொகுப்பு ஜூன் 15-ம் தேதி முதல் மக்கள் பெற்றுச் செல்லலாம். இதற்காக ஜூன் 11 முதல் 14-ம் தேதிவரை கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். அதே நேரம் ஜூன் 11 முதல் 14 வரை காலை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழக்கம் போல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x