Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
ஈரோடு: ஈரோடு நகரில் செயல்படும் 11 அம்மா உணவகங்களிலும் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு நகரில் காந்திஜி சாலை, அரசு தலைமை மருத்துவமனை வளாகம், சூளை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், சின்ன மார்க்கெட் உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், வறுமையில் வாடும் முதியவர்கள் இங்கு உணவருந்தி வருகின்றனர். தற்போது கரோனா பரவல் காரணமாக அம்மா உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஈரோட்டில் செயல்படும் 11 அம்மா உணவகங்களிலும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், இதற்கான செலவை தெற்கு மாவட்ட திமுக ஏற்றுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT