Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

டோக்கன்களுடன் வந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படாததால் ஏமாற்றம் :

கரூர்: கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது, புதிதாக தடுப்பூசி போட வந்தவர்களுக்கு ஜூன் 7-ம் தேதி (நேற்று) வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அந்தப் பள்ளி முன்பு நேற்று காலை முதலே 100-க்கும் மேற்பட்டோர் டோக்கன்களுடன் திரண்டனர். ஆனால், அங்கு ‘தடுப்பூசி இல்லை. வந்தபின் அறிவிக்கப்படும்’ என அறிவிப்பு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கரூர் நகர போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, தடுப்பூசி வந்ததும் டோக்கன் வைத்திருப்பவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனக் கூறி அனுப்பிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x