Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
தென்காசி: தென்காசி மாவட்ட சிஐடியு பொதுச் செயலாளர் வேல்முருகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். கரோனா ஊரடங்குகாரணமாக, கடந்த ஒரு மாத காலமாக அனைத்து பீடி கம்பெனிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தினசரி வேலை செய்யும் பீடி தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு பீடி தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. பீடிகம்பெனி, பீடி கடையை திறக்கஅனுமதிக்க வேண்டும். மீனவர்கள், கோயில் பூசாரிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கியது போல், பீடி தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கொடுத்த கடனை தற்போது அநியாய வட்டியுடன் கேட்டு வருகின்றன. பீடி தொழிலாளர்களின் இதுபோன்ற துயரங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT