Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

காலை, மாலை இரு வேளையும் : ரேஷன் கடைகள் செயல்படும் : நிவாரணம் வழங்க ஜூன் 11 முதல் டோக்கன்

சென்னை

தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் காலை 9 முதல் 12.30 வரையும் பிற்பகல் 2 முதல் 5 மணிவரையும் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 14-ம்தேதி வரை நடைமுறைபபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி, மளிகைக்கடைகள் மற்றும்அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் காலை6 முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணிவரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரையும் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.

மேலும், கரோனா நிவாரணத்தின் 2-ம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள் தொகுப்பு ஆகியவை ஜூன் 15-ம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக ஜூன் 11 முதல் 14-ம் தேதிவரை கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். அதே நேரம் ஜூன் 11 முதல் 14 வரை காலை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

காய்கறி, மளிகைக்கடை கள் மற்றும் அத்தியாவ சியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் காலை 6 முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x