Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என சென்னையில் கடந்த 6 மாதத்தில் 157 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அனைத்து வகையான குற்றச்செயல்களையும் தடுத்து நிறுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி சட்ட விரோதமாக விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு ஜன.1 முதல் நேற்று முன்தினம் வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 101 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 29 பேர், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 12 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்து வந்த 12 பேர் மற்றும் உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற 2 பேர் என மொத்தம் 157 பேர் சென்னை காவல் ஆணையர் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT