Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
கோயம்பேடு சந்தை வளாகத்தில், ஊரடங்கு காலத்திலேயே தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி முடிவு செய்திருந்தது.
அதன்படி நேற்று பகல் 12 மணி முதல் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 200 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஷங்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தீவிர தூய்மைப் பணி தொடர்ந்து மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றை கட்டுபடுத்த அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வணிகர்களுக்கு அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று இதுவரை 6 ஆயிரத்து 340 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இங்கு வரும் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் என நாள்தோறும் சுமார் 500 பேருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இதுவரை 2,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர் பி.என்.தர், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்எல்ஏ, சந்தை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT