Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

மதுரை பி.எப். அலுவலகத்தில் : ஜூன் 10-ல் காணொலியில் குறைதீர் கூட்டம் :

இது தொடர்பாக மதுரை மண்டல ஆணையர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் நிறுவன உரிமையாளர்கள், வைப்பு நிதி உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். காணொலி கூட்டத்தில் பங்கேற்க மொபைல் போனில் கூகுள்பிளே ஸ்டோர் வழியாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து, அதை ro.madurai@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 9-க்குள் அனுப்ப வேண்டும். மண்டல அலுவலகத்தில் இருந்து காணொலிக் கூட்டத்தில் பங்கேற்க தனி தொடர்பு எண் வழங்கப்படும். அந்த எண்ணைப் பயன்படுத்தி குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x