Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
ஒடிசா மாநிலம், ரூர்கேலாவி லிருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் நேற்று மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
இது தொடர்பாக மதுரைக் கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவி லிருந்து 6 டேங்கர் லாரிகளில் 89.2 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் நேற்று மாலை மதுரை கூடல்நகர் வந்து சேர்ந்தது. இது தமிழகத்துக்கு வந்த 50-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில். ஏற்கெனவே மதுரை வாடிப்பட்டி, தூத்துக்குடி மீளவிட்டான், ஆகிய ரயில் நிலையங்களுக்கு தலா ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வந்துள்ளன. ரோல் ஆன் - ரோல் ஆப் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட டேங்கர் லாரிகள் கூடல்நகர் ரயில் நிலையம் வந்தவுடன் சாலை மார்க்கமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுவரை தமிழகத்துக்கு ரயில் மூலம் 3404.85 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. தென் மாவட்டங் களுக்கு மட்டும் இதுவரை 435.19 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் ரயில் மூலம் வந்து சேர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT