Published : 07 Jun 2021 03:15 AM
Last Updated : 07 Jun 2021 03:15 AM
திருவண்ணாமலை: தி.மலை கிரிவலப் பாதையில் திடீர் பூஜையில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தி.மலை கிரிவலப் பாதையில் ‘திடீர் பூஜைகள்’ நடத்தப்படுவது வழக்கம். உள்ளூர் நபர்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் வசிப்பவர்களும், கிரிவலப் பாதையில் காலி இடத்தை தேர்வு செய்து, பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கின்றனர். கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கிரிவலப் பாதையில் பூஜை செய்யும் நபர்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில், கிரிவலப் பாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே பெண் ஒருவர் நேற்று முன்தினம் அம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இதற்காக, சிறிய யாக குண்டமும் அமைத்துள்ளார். மேலும், அவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லவும் தயாராக இருந்துள்ளார். இதையறிந்த திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT