Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM

மூதாட்டியிடம் நகை பறிப்பு :

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த குமாரசாமி மனைவி லீலா(78). இவர் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்தனர். கத்தியை காட்டி மிரட்டி, லீலா கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். தச்சநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x