சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் :

சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் :
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் இன்று (4-ம் தேதி) காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாநகராட்சியில் ஏப்ரல் முதல் இதுவரை 2,732 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 437 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 28 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 4,132 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று (4-ம் தேதி) காலை 9 மணி முதல் 1 மணி வரை புதிய திருச்சி கிளைச் சாலை, திரு.வி.க. நகர், தர்ம நகர், அண்ணா சாலை, சின்னத்திருப்பதி, சிவதாபுரம் பகுதிகளிலும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாலகாந்தி ரோடு, வையாபுரி யாதவ் தெரு, காமராஜர் காலனி, கோரிமேடு, மெய்யனூர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை அரியாகவுண்டம்பட்டி, காசக்காரனூர், காந்திரோடு, பாரதி நகர், அன்பு நகர், கோவிந்தன் தெரு, வாசகசாலை, கிருஷ்ணன் புதூர், வித்யா நகர், எஸ்.எம்.சி காலனி, தார்பாய்காடு, சஞ்சீவிராயன் பேட்டை பள்ளி, அம்மாள் ஏரி ரோடு ஆறாவது குறுக்கு தெரு, தீயணைப்பு நிலையம், பஞ்சதாங்கி ஏரி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடக்கிறது. குகை குருசாமி பள்ளியில் காலை 9 முதல் 1 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in