நாமக்கல்லில் 3,900 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி :

நாமக்கல்லில் 3,900 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி :
Updated on
1 min read

கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2-வது தவணையாக தடுப்பூசி போட வந்தவர்களுக்கு தடுப்பூசி போதிய கையிருப்பு இல்லாததால் மக்களுக்கு போடப்படவில்லை.

இச்சூழலில் 3,900 தடுப்பூசிநாமக்கல் மாவட்டத்துக்கு வந்தது. திருச்செங்கோடு, குமார பாளையம் உள்பட்ட 12 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு 3,900 பேருக்கு 2-வது தவணையாக தடுப்பூசிகள் போடப்பட்டது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in