விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் : அமைச்சர் பொன்முடி தகவல்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை குறித்த  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

அரகண்டநல்லூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் விவரம் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு வியாபாரிகள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். மேலும் 10 நாட்களுக்குள் நிலுவைத் தொகை செலுத்தாத வியாபாரிகள் பதிவினை நீக்கம்செய்ய நடவடிக்கை மேற்கொள் ளப்படும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அனைத்தும் முழுமையாக விரைவில் வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பயிர் நிலுவைத் தொகை விருதிவிலங்கினான் கோவிந்தராஜனுக்கு ரூ.24,224-ம், பில்ராம்பட்டு மணிக்கு ரூ.20, 240-ம் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in