Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

ஊரடங்கில் தனியார் பணியாளர்களுக்கு தடுப்பூசி :

தோமையார்புரம் தனியார் பால் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைப் பார்வையிட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டார சுகாதார மையங்கள் மூலம் ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

திண்டுக்கல் அருகே தோமை யார்புரத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதை ஆட்சியர் மு.விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தும்பணி மாவட்டத்தில் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவ வாய்ப்புள் ளதாகக் கருதப்படும் செய்தி யாளர்கள், செய்தித்தாள் விநி யோகிப்பவர்கள், பால் முகவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட 18 வயது முதல் 44 வயது உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x