Published : 27 May 2021 03:12 AM
Last Updated : 27 May 2021 03:12 AM

வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த கரூரில் 11 குறுக்கு சாலைகள் அடைப்பு :

கரூர் நகர் பகுதியில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த பிரதான சாலைகளை இணைக்கும் 11 குறுக்கு சாலைகள் அடைக் கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரூரில் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸார் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸார் சோதனை சாவடி அமைத்துள்ள இடங்களை தவிர்த்துவிட்டு நகரின் குறுக்கு சாலைகளை பயன்படுத்தி பலர் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கரூர் நகர காவல் நிலையம், கரூர் நகராட்சி இணைந்து நகரின் பிரதான சாலைகளை இணைக்கும் காமராஜ் மார்க்கெட், காமராஜ் சாலை உள்ளிட்ட 11 குறுக்கு சாலைகளை மூங்கில் தடுப்புகள், பேரிகார்டுகள் கொண்டு நேற்று அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x