செஞ்சி அருகே 1,120 பாக்கெட் சாராயம் பறிமுதல் :

செஞ்சி அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகள் மற்றும் எரி சாராய கேன்கள்.
செஞ்சி அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகள் மற்றும் எரி சாராய கேன்கள்.
Updated on
1 min read

செஞ்சி அருகே 1,120 பாக்கெட் சாராயம், 70 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் இயங்கும் சிறப்பு காவல்படை போலீஸார் நேற்று முன்தினம் செஞ்சி அருகே அவலூர்பேட்டை காவல் சரகத்தில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவலூர்பேட்டை புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் (32), தேவகுமார் (35) ஆகியோர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.

அவர்கள் பதுக்கி வைத்திருந்த 70 லிட்டர் எரிசாராயம் மற்றும் தலா 100 மிலி கொள்ளளவில் 1,000 பாக்கெட் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கோவில்புரையூர் கிராமத்தைச் சேந்த சக்திவேல் என்பவர் பதுக்கி வைத்திருந்த 120 பாக்கெட் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in