Published : 23 May 2021 05:52 AM
Last Updated : 23 May 2021 05:52 AM

சோதனைச் சாவடியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது :

கரூர் திருமாநிலையூர் ரவுண் டானா சோதனைச் சாவடியில் பசுபதிபாளையம் தலைமைக் காவலர் சரவணன் நேற்று அதிகாலை பணியில் இருந்துள் ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சோதனை சாவடி மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுவிட்டது. அது அங்கிருந்த மின்வயர் மீது பட்டு, கீழே விழுந்தது. இதில் யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை.

இதுகுறித்து தலைமை காவலர் சரவணன் அளித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திருமாநிலையூரை சேர்ந்த ராமமூர்த்தி(21), கதிரேசன்(21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. தலைமறைவான ஜெயசூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x