உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்களுக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்க கோரிக்கை :

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி -  ஊழியர்களுக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்க கோரிக்கை :
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி யில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கக்கோரி உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரிடம் மனு அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிபுரிந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் மத்தியில் கரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகிகள் அதன் தலைவர் மணிகண்டன் தலைமையில் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜே.மணிக்கண்ணனை சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.

அதில், “கரோனா தொற்றால் உயிரிழந்த ஜெயப்பிரகாஷ் குடும்பத்தினருக்கு தமிழர அரசு சார்பில் நிவாரண உதவியும், கரோனா காலத்தில் ஊழியர்களின் குடும்பத்தினரின் நலன்கருதி ஊரடங்கு முடியும் வரை ஊழியர்களுக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in