ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தவர்பெண் கொலை வழக்கில் தேடப்பட்டவர் :

ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தவர்பெண் கொலை வழக்கில் தேடப்பட்டவர் :
Updated on
1 min read

செந்துறை அருகே கடந்த 17-ம் தேதி ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தவர், பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள பெரியாக்குறிச்சி சுண்ணாம்புக்கல் சுரங்கம் அருகே கடந்த 17-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தார். அவர் யார் என விருத்தாசலம் ரயில்வே போலீஸாரும், செந்துறை போலீஸாரும் விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வண்ணான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(29) என்பதும், அப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் நேற்று முன்தினம் தெரியவந்தது.

இதையடுத்து, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்ட ராமச்சந்திரனின் உறவினர்கள், அவரது சடலத்தை உறுதிசெய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in