Published : 19 May 2021 03:14 AM
Last Updated : 19 May 2021 03:14 AM

கிணற்றில் விழுந்த மாணவி உயிரிழப்பு :

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள மேலப்பழுவூர் மேலத்தெருவைச் சேர்ந்த பிச்சை மகள் ராதா(13). இவர் அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது தோழிகளுடன் ஆடுமேய்க்க அக்கிராமத்தில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் வாளி மூலம் தண்ணீர் எடுக்க முயன்றபோது ராதா தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x