Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM
ஆம்பூர் நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம், பழைய வாணியம்பாடி சாலையில் உள்ள பூஹா சாதி மஹாலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார்.
ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் முன்னிலை வகித்தார். திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ஆம்பூர் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் வசிக் கும் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
முன்னதாக, தொற்று ஏற்படா மல் தங்களையும் தங்கள் குடும் பத்தையும் பாதுகாத்துக் கொள்ளு மாறும் 45 வயதுக்கு மேற்பட்ட வர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என ஒலிபெருக்கி மூலம், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, ஆங்காங்கே பதாகைகள் வைத்து ஆம்பூர் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இம்முகாமில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர், நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர், ராமு, மருத்துவர்கள் அருணா, பெருமாள், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT