குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் - தி.மலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் :

தி.மலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.
தி.மலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை நகரம் 38-வது வார்டு பகுதியில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை நகரம் 38-வது வார்டுக்கு உட்பட்ட வேடியப்பன் கோயில் வீதிகள், குறத்திபாறை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர். இருப் பினும், நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகை யிட்டனர். அப்போது அவர்கள், எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீருக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தடையின்றி குடிநீர் வழங்குவதாக நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால், பல இடங்களில் மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை” என்றனர்.

இதையடுத்து, முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது அவர்களிடம், குடிநீர் இல்லாமல் தவிப்பதாக பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் வரை, லாரியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர். அதன்பிறகு, முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in