Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி முதல் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்த நிலையில், திருப்பத்தூர் அடுத்த சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத் (24) என்ற இளைஞர் சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்ட காவல் துறையினர் அருண்பிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT