Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - கரோனா பரவல் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் ஆர்.காந்தி ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு முன்களப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (தி.மலை), கதிர்ஆனந்த் (வேலூர்), எஸ்பி., டாக்டர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. கரோனா 2-வது அலை பரவல் காரணமாக 6,164 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில், 3,533 பேர் குணமடைந்துள்ளனர். 2,255 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 88 பேருக்கு தொற்று தீவிரமடைந் ததால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு மே 15-ம் தேதி வரை மொத்த பாதிப்பு 13,814 ஆகும். இதில், 11,345 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 214 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கரோனா மருத்துவ சிகிச்சையில் மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என மொத்தம் 1,402 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா கண்காணிப்பு மையங்களில் 3,020 படுக்கைகள் உள்ளன. தகுதியுள்ள 56 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி யும், 18,500 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனை களிலும் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளது. ஒரு உயிரிழப்புக்கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் மருத்து வர்கள், செவிலியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் கரோனா தொற்று குறைவாகவே காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது. தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் என்னென்ன வசதிகள் வேண்டுமோ அதை செய்ய அரசு தயாராக உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு விரைவில் மருத்துவக் கல்லூரி கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப் பாட்டை போக்க தேவையான புதிய கட்டமைப்பு வசதிகளை மருத்துவமனைகளில் ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், வருவாய் கோட்டாட்சி யர் காயத்ரி சுப்பிரமணி, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில், மண்டல நகராட்சி நிர்வாகங்களின் இயக்குநர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x