Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

ஈரோடு, நாமக்கல்லில் 10 பேர் உயிரிழப்பு :

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிக்கையின்படி நேற்று 781 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 613 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனையில் 77 வயது ஆண் உட்பட 5 ஆண்கள், 80 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 560 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2455 பேர் கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x