Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

சேலம் மாவட்டத்தில் இதுவரை 8.54 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை :

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பரிசோதனைகளையும் அதிகாரிகள் அதிகப்படுத்தியுள்ள னர். சேலம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் இதுவரை 8,54,736 பேருக்கு கரோனா பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 49 ஆயிரத்து 371 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 44,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 4,115 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 638 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x