ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், தி.மலை மாவட்டங்களில் - ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு தொழுகை :

ரம்ஜான் பண்டிகையையொட்டி, வேலூர் சாயிநாதபுரம் பகுதியில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். அடுத்த படம்: ஆம்பூரில் வீட்டின் மொட்டை மாடியில் பாதுகாப்புடன் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட சிறுவர், சிறுமிகள். கடைசிப் படம்:  திருவண்ணாமலையில் வீட்டிலேயே ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர் குடும்பம்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி, வேலூர் சாயிநாதபுரம் பகுதியில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். அடுத்த படம்: ஆம்பூரில் வீட்டின் மொட்டை மாடியில் பாதுகாப்புடன் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட சிறுவர், சிறுமிகள். கடைசிப் படம்: திருவண்ணாமலையில் வீட்டிலேயே ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர் குடும்பம்.
Updated on
1 min read

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் இஸ் லாமியர்கள் புனித ரம்ஜானை பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா இரண் டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையை யொட்டி பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லா மியர்கள் புத்தாடை அணிந்து கொண்டாடியதுடன் வீடுகளில் சமூக இடைவெளியுடன் தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

திருப்பத்தூர்

இதனை பின்பற்றிய இஸ்லாமியர்கள் திருப்பத்தூர், வாணியம் பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் இருந்தபடியே சிறப்பு தொழுகை யில் ஈடுபட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல் போன் வாயிலாக ரம்ஜான் வாழ்த் துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளும் வீட்டில் இருந்தபடி கூட்டு தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

திருவண்ணாமலை

இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக மசூதிகளுக்கு இஸ்லாமியர்கள் நேற்று செல்ல வில்லை. அதற்கு மாற்றாக, அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் தொழுகையில் ஈடுபட்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர் களுக்கு செல்போன் மூலமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் அவர்கள், மசூதிகளின் நிர்வாகம் மூலமாக தானம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in