Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

விழுப்புரம் டிஐஜிக்கு கரோனா தொற்று :

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் டிஐஜி முகாம் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து டிஐஜி பாண்டியன் மற்றும் முகாம் அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், விழுப்புரம் டிஐஜி பாண்டியனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக நிமியக்கப்பட்ட டிஐஜி பாண்டியன், மூன்று மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். மேலும், முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியினையும் மேற்பார்வை செய்து வந்தார். இந்நிலையில் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின் பேரில் நேற்று முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x