கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா :

கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 672 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 35,840 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 230 பேர் உட்பட 32, 042 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 382 பேர் உயிரிழந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 14,831 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 24,400 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 533 பேர் உட்பட 21,603 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in