கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தலா 40 ஆக்சிஜன் படுக்கைகள் : அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தலா 40 ஆக்சிஜன் படுக்கைகள் :  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்
Updated on
1 min read

கரூர் பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சைக் கான சிறப்பு சித்த மருத்துவப் பிரிவு மையத்தை தமிழக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, நேற்று பார்வையிட்டார்.

பின்னர், அவர் கூறியது: கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறைந்தளவு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு, கரூர் பழைய அரசு மருத்துவமனை, குளித்தலை, வேலாயுதம்பாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மைலம்பட்டி, வெள்ளியணை ஆகிய 8 இடங்களில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தலா 40 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்து, மே 25-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

அப்போது, கரூர் எம்.பி செ.ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச உணவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in