விருதுநகரில் கூடுதல் டிஜிபி ஆய்வு :

விருதுநகரில் கூடுதல் டிஜிபி ஆய்வு :
Updated on
1 min read

விருதுநகரில் கரோனா தடுப்பு மற்றும் காவலர்களுக்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா பரவலைத் தடுக்க விருதுநகர் மாவட்டத்துக்கான கண்காணிப்பு மற்றும் பொறுப்பு அலுவலராக மனித உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை யிலிருந்து விருதுநகர் வந்த கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி பெருமாளுடன் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம், போலீஸாருக்கான பாது காப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in