முழு ஊரடங்கு அமலில் உள்ளபோதும் திருச்சி மாநகரில் - வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு : கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருச்சி மாநகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நேற்று வாகனங்களில் பயணித்த மக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருச்சி மாநகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நேற்று வாகனங்களில் பயணித்த மக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருச்சி மாநகரில் வாகனப் போக்குவரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மே 10-ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் தேவைக்காக மளிகை, காய்கனி, இறைச்சிக் கடைகள் மட் டும் பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கின் முதல் நாளான மே 10-ம் தேதி இரு சக்கர வாகனப் போக்குவரத்து அதிகமாகவும், கார்கள் குறைவாகவும் காணப் பட்டன. ஆனால், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கின் 2-வது நாளான நேற்று முன்தினமும், 3-வது நாளான நேற்றும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகள வில் இருந்தது.

முழு ஊரடங்கு அமலில் இருப்பதே தெரியாத அளவுக்கு மாநகரின் பல்வேறு சாலைகளிலும் இரு சக்கர வாக னங்களும், நான்கு சக்கர வாகனங் களும் அதிகளவில் இயங்கின.

இதனால், போலீஸார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளை நிறுத்தி விசாரித்து தேவையின்றி வெளியே சுற்றியவர்களை எச்சரித்து அனுப் பினர். முகக்கவசம் அணியா மல் வந்தவர்களுக்கும், அதிக எண்ணிக்கையில் ஆட்கள் ஏற்றி வந்த இலகுரக வாகனங்களுக்கும் மட்டும் போலீஸார் அபராதம் விதித்தனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கள் கூறியது: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதே தெரியாத அளவுக்கு திருச்சி மாநகர சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகள வில் உள்ளது. போலீஸார் ஊரடங்கு விதிமீறல் வழக்கு பதிவு செய்யாமல், எச்சரித்து மட்டும் அனுப்புவதாலேயே மக்கள் அலட்சியமாக உள்ளனர்.

இன்றளவும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் இருக்கும் நிலையில், ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “தேவையின்றி வெளி யில் சுற்றுபவர்களின் வாகனங் களை பறிமுதல் செய்யவோ, ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்வது தொடர் பாகவோ உரிய அறிவுறுத்தல் வரப்பெறவில்லை’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in