Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் முறைகேடு :

மதுரை: திருமங்கலம் கப்பலூர் காந்திநகரைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (31). டிப்ளமோ பொறியாளரான இவருக்கு தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த பிரவீன் (31) நண்பரானார். இவர் தனது நண்பர் பிச்சை என்பவரிடம் செந்தில்நாதனை அறிமுகம் செய்து வைத்தார். விமான நிலையங்களில் உயரதிகாரிகளை தெரியும், சரக்கு போக்குவரத்து (கார்கோ) பிரிவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். செந்தில்நாதனும் இதை நம்பியுள்ளார்.

விமான நிலைய வேலைக்காக வங்கிக் கணக்கு மூலம் 2018 மார்ச் மாதம் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்ட பிச்சை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றினார். இது தொடர்பாக செந்தில்நாதன் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பிரவின் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தேடுகின்றனர். திருமங்கலம் அருகிலுள்ள ஏ.அரசபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (30) என்பவரிடமும் பிச்சை கடந்த 2019 ஜனவரியில் வங்கிக் கணக்கு மூலமாக ரூ.90 ஆயிரம் வாங்கி மோசடி செய்துள்ளார். லட்சுமணன் புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x