Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

நாட்றாம்பள்ளி செட்டேரி அணைக்கு - கிருஷ்ணகிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் : எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை செட்டேரி அணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோலார்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், வெலக் கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜோலார்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் தேவராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம் மனுவில் கூறியிருப்ப தாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் செட்டேரி அணை உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை செட்டேரி அணைக்கு கொண்டு வர வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலம் பயன்பெறும்.

அது மட்டுமின்றி நாட்றாம் பள்ளி, வெலக்கல்நத்தம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமப்பகுதி களில் குடிநீர் பற்றாக்குறையும் தீரும்.

இது தொடர்பாக ஏற்கெனவே பல முறை கோரிக்கை விடுக்கப் பட்டும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.’’ என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற ஜோலார் பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் களிடம் கலந்து பேசி விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x