Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டுவந்த கரோனா பரிசோதனை மையத்தை தனியார் பள்ளி வளாகத்துக்கு மாற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
கோவை அரசு மருத்துவமனை யில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா சிகிச்சை வார்டு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டி யன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை வளா கத்தில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்திய அவர், ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்கள் தங்களது வாகனங்களை மருத்துவமனை வளாகத்துக்குள் நிறுத்தாமல், அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்துக்குள் நிறுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டுவந்த கரோனா பரிசோதனை மையத்தை, அருகேயுள்ள செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்துக்கு மாற்றவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கோவை ஆத்துப்பாலம் மின் மயானம், போத்தனூர் செட்டிபாளையம் சாலை மாநகராட்சி மின் மயானம், சொக்கம்புதூர் மின் மயானம் ஆகிய இடங்களுக்கு சென்று அவற்றின் செயல்பாடுகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT