Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM

தென்காசி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் :

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்காசி மாவட்டஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ளபொதுமக்கள் கரோனா தொற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைப்படுத்தியுள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளிக்கவும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. 04633 290548 அல்லது 04633 1077 மற்றும் 04633 281100, 04633 281102, 04633 281105 ஆகியதொலைபேசி எண்களில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை கீழ்கண்டதொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு கரோனா நோய்த் தொற்று தொடர்பான சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

நகராட்சிகள்: தென்காசி 04633 - 222228, 04633 - 226999, சங்கரன்கோவில் 04636 224719, 04636 222236. புளியங்குடி 99523 56001.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்: கடையநல்லூர் 04633 240250, செங்கோட்டை 04633 233058. கீழப்பாவூர் 04633 - 250223. வாசுதேவநல்லூர் 04636 241327. குருவிகுளம் 94425 84129. மேலநீலிதநல்லூர் 04636 290384, ஆலங்குளம் 04633 270124. கடையம் 04634 240428.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x