திட்டக்குடி அருகே 15 பவுன் கொள்ளை :

திட்டக்குடி அருகே  15 பவுன் கொள்ளை :
Updated on
1 min read

திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். விவசாயி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் சிலம்பரசன், தனது தாயார் கனகம், தங்கை ரேவதி, அவரது மனைவி ஆகியோருடன் வீட்டின் வராண்டாவில் தூக்கியுள்ளார்.

நேற்று காலை கனகம் எழுந்து பார்த்து போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டு அறையில் இருந்த பிரோவை பார்த்தார். பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in