திருச்சி விமானநிலையத்தில் : ரூ.60 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல் :

திருச்சி விமானநிலையத்தில் : ரூ.60 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல் :
Updated on
1 min read

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.247 கிலோ தங்கக் கட்டிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களின் உடமைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, காரைக்குடியைச் சேர்ந்த அயூப் கான்(30) என்பவர் உடமைகளுக்குள் மறைத்து ரூ.60.71 லட்சம் மதிப்பிலான 1.247 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அயூப் கானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in