Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தியெம்பெருமானுக்கு நேற்று பிரதோஷத்தையொட்டி பல் வேறு பொருட் களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஏப்.16-ம் தேதி முதல் தஞ்சாவூர் பெரிய கோயில் மூடப்பட்டது. ஆனாலும், வழக்கம்போல நான்கு கால பூஜையும், பிரதோஷ வழிபாடும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரதோஷத்தை யொட்டி நேற்று நந்தியம்பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கரோனா தொற்று ஒழிய வேண்டியும், தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் பூரண குணமடைய வேண்டியும் 54 குடங்கள் நீரைக் கொண்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பித்து, வழிபாடு நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT