தென்காசி மாவட்டத்தில் மது விற்ற  114 பேர் கைது  :

தென்காசி மாவட்டத்தில் மது விற்ற 114 பேர் கைது :

Published on

தென்காசி மாவட்டத்தில் மது விற்ற 114 பேர் கைது செய்யப்பட்டு, 2,473 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்ற 114 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,473 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதால் தொடர்ந்து கண்காணிப்புப் பணி நடைபெறும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in