புதுச்சேரியில் 1,703 பேருக்கு கரோனா : மேலும் 19 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 1,703 பேருக்கு கரோனா  :  மேலும் 19 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், புதிதாக 1,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 9,132 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,355, காரைக்கால் - 171, ஏனாம் – 153, மாஹே - 24 என மொத்தம் 1,703 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 14 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 3 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆண்கள் 11 பேர், பெண்கள் 8 பேர் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.34 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 2,057 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11,528 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 13 ஆயிரத்து 585 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று அதிகபட்சமாக 1,177 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 552 (79.27 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 8 லட்சத்து 47ஆயிரத்து 293 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 568 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 78 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in