Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு : ஒரே நாளில் 1, 217 பேருக்கு தொற்று

மதுரை

மதுரையில் கரோனாவால் பாதி க்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தார்.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 1,217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியாவும்(31) கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 3 நாட் களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x