நாய்கள் கடித்து : புள்ளி மான் உயிரிழப்பு :

தி.மலை புது வாணிய குளத்தெருவில் நாய்கள் கடித்து படுகாயமடைந்த  மானை வனத்துறையிடம்  ஒப்படைத்த பொதுமக்கள்.
தி.மலை புது வாணிய குளத்தெருவில் நாய்கள் கடித்து படுகாயமடைந்த மானை வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் உள்ள அண்ணா மலையில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையில் இருந்து தண்ணீர் தேடி, சம தளப் பகுதிக்கு வன விலங்குகள் படையெடுத்து வருகின்றன. அவ்வாறு நேற்று தண்ணீர்தேடி வந்த புள்ளிமானை நாய்கள் விரட்டிச் சென்று கடித்தன. அவற்றின் பிடியில் இருந்து தப்பிக்க, திருவண்ணாமலை புது வாணியக் குளத்தெருவில் உள்ள பெரியாண்டவர் கோயிலில் அந்த புள்ளிமான் தஞ்சமடைந்தது. இதையறிந்த கோயில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினரிடம் மான் ஒப்படைக்கப் பட்டது. இதையடுத்து, படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மானை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in