வீரபாண்டி அருகே சிறுவனை தாக்கியோரை கைது செய்யக் கோரி சாலை மறியல் :

வீரபாண்டி அருகே சிறுவனை தாக்கியோரை கைது செய்யக் கோரி சாலை மறியல் :
Updated on
1 min read

இது குறித்த அவர்கள் கூறியதாவது: கராத்தே மாஸ்டரான ரமேஷ் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக சிலர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். சிறுவன் சக்திவேல்தான் தகவல் அளித்ததாக நினைத்து ரமேஷூம், அவரது உறவினர்களும் சிறுவனை மதுபாட்டிலால் தாக்கினர். இதில் காயமடைந்த சிறுவன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தருண், ரமேஷ், பாண்டியம்மாள், முத்தையா உள்ளிட்டோர் மீது வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.ஆனால் இதில் 4 பேரை மட்டும் கைது செய்தனர். மற்றவர்களையும் கைது செய்யக்கோரி சிறுவனின் உறவினர்கள், தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் செய்தனர். காவல் ஆய்வாளர் உலகநாதன் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in