Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

முதல், 2-வது ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை :

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மாதத்தின் முதல் மற்றும் 2-வது ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்பட்டு வந்தன. அவற்றுக்கு பதிலாக முதல் மற்றும் 2-வது வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது கரோனா தொற்று காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக் கப்பட்டதைத் தொடர்ந்து, மாதத் தின் முதல் மற்றும் 2-வது ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக மாதத்தின் முதல் மற்றும் 2-வது வெள்ளிக் கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x