Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
புதுச்சேரி மாநிலத்தில், கரோனோ தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏப்.20-ம் தேதி முதல் புதுச்சேரியில் அரசு இரவு நேர முழு ஊரடங்கையும், பகல் நேரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.
இதனிடையே, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தொற்று பரவல் தடுப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடந்த 3-ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியிருந்தனர்.
கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 10-ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி ஆளுநர் உத்தரவிட்டார்.
அதன்படி உணவு, காய்கறி, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தேநீர் கடைகளுக்கு பார்சல் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்த தளர்வினையும் ரத்து செய்து, தேநீர் கடைகளை மூடவும், கடற்கரை சாலை,பூங்காக்களையும் மூடவும் புதுச்சேரி ஆட்சியர் பூர்வாகார்க் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, நேற்று முதல் முதல் நீட்டிக்கப்பட்ட, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு புதுச்சேரியில் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய காய்கறி, மளிகை, பால், மருந்து பொருட்களுக்கான கடைகள், தொழிற்சாலைகள் மட்டும் இயங்கின. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன.
தேநீர் கடைகள் மூடப்பட்டன
புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதிப்பூங்கா, தாவரவியல் பூங்கா போன்ற இடங்களும் மூடப்பட்டன. இதனால், நேற்று முக்கிய சாலைகளில் குறைந்த அளவிலான வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டது. பேருந்து, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கின.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT