Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
அதிமுகவின் செல்வாக்குடைய திருப்பரங்குன்றம் தொகுதியை 2 ஆண்டுக்குப் பின் அக்கட்சி மீண்டும் கைப்பற்றி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றம் தொகுதி அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த தொகுதி. இங்கு 1977-ம் ஆண்டு முதல் தற்போது நடந்த தேர்தல் வரை 9 முறை அதிமுக வெற்றி கண்டுள்ளது. 3 முறை திமுக வென்றுள்ளது.
2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வெற்றி பெற்றது. அந்தளவுக்கு அதிமுக வுக்கு செல்வாக்கு மிக்க தொகுதி யாகும்.
2016 தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கு முன் உயிரிழந்ததால் இடைத் தேர்தல் நடந்தது.
அதில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உயிரிழந்ததால் 2019-ல் இடைத்தேர்தல் நடை பெற்றது. அதில் அதிமுக, திமுகவிடையே நேரடி போட்டியில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார்.
தற்போது நடந்த முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய் இடையே போட்டியில் ராஜன் செல்லப்பா வெற்றி பெற்றார்.
இதன்மூலம் திமுக வசமிருந்த தொகுதியை கைப்பற்றி, தனது செல்வாக்கை அதிமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT