Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கர்ப்பிணி பெண் உயிரிழப்பில் பெற்றோர் சந்தேகம்: போலீஸ் விசாரணை :

சேலம்: சேலத்தில் திருமணமான ஏழு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தது தொடர்பாக பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அடுத்த நங்கவள்ளி கரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி லட்சுமி நரசிம்மன். இவரது மகள் குமுதா (27). இவருக்கும் தண்ணீர் குட்டப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தனியார் தொழிற்சாலையில் அருண்குமார் பணிபுரிந்து வருகிறார். குமுதா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த குமுதாவின் தந்தை லட்சுமி நாராயணன் நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில், தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்கள் ஆவதால், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x